search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்"

    வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிடக்கோரி நாகையில் சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுனந்தா தேவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில தலைவர் நாகை செல்வன் கலந்து கொண்டு பேசினார்.

    பணிச் சுமையை குறைக்கும் வகையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி போடும் பணியின் நேரத்தை மாற்ற வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்துதர வேண்டும்.

    தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, காழ்ப்புணர்ச்சியோடு சமூக விரோதிகளின் தாக்குதல் நடைபெறுவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட வேண்டும். கொரோனா தடுப்பூசி முகாம்களை ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்துவதை மாற்றி, சனிக்கிழமைகளில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.
    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சகுந்தலா தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜெயசித்ரா வரவேற்றார். செயலாளர் ஆனந்த் சங்கத்தின் கோரிக்கைகளை குறித்து விளக்கவுரையாற்றினார். நீதிமன்ற உத்தரவின்படி செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    இடமாறுதல் ஆணை பெற்ற 8 மாதங்களாகியும் விடுவிக்கப்படாத செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அனைவருக்கும் ஏற்புடைய ஒரே மாதிரியான சீருடை அரசு வழங்க வேண்டும். சங்க மாநில நிர்வாகிகள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து பொருளாளர் விஷ்ணு நிறைவுரையாற்றினார். முடிவில் சரண்யா நன்றி கூறினார்.
    ×